இளம் பெண்ணுக்குள் பேய்…டீல் பேசும் போலி சாமியார்!!

திருப்பூரை சேர்ந்த சுவாமி ஜி என்பவரிடம் தஞ்சாவூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி அவரிடம் அழைத்து வந்துள்ளனர். அப்போது சாமியார் முன்பு நின்ற அந்த பெண் தான் ரமேஷ் என்றும், பாரில் மது அருந்தி விட்டு புல் போதையில் பல்சர் வாகனத்தில் சென்ற போது அடிபட்டு பலியானதாகவும், அப்போது அவ்வழியாக வந்த இந்த இளம்பெண்ணுக்கு தான் புகுந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்தப்பெண்ணிடம் பேசிய சாமியார் உனக்கு குவாட்டரும், கோழிப்பிரியாணியும் வாங்கி தருகிறேன், அதை திண்றுவிட்டு ஒழுங்கா ஓடி விடு என்று கூறியதை அடுத்து, அந்தப்பெண்ணுக்கு குவாட்டரும், கோழிப்பிரியாணியும் கொடுக்கப்ப்பட்டது. இதனை சாப்பிட்டு அந்தப்பெண் போதையில் மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் மஞ்சள் தண்ணீரை ஊற்றி எழுப்பிய போது, பேய் பிடித்ததாக் கூறப்படும் ரமேஷ் ஓடிவிட்டது போல், தன் உண்மையான ஊர் பெயரை சொல்லியுள்ளார். பின்னர் பேசிய அந்த சாமியார், மறுபடியும் இந்த பெண்ணின் உடலில் வந்தால் கண்டம் துண்டமாக வெட்டி தீக்குண்டத்தில் போட்டுவிட்டேன் என மிரட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *