நாளை 15 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் நாளை நாளை 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இதனையடுத்து நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது,
அதே போல் திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, திருப்பத்தூர், வேலூரில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யக்கூடு என கூறியுள்ளது.
நாளை மறுநாள் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.