சொத்து தகராறில் இளைஞர் வெட்டி படுகொலை!!

தமிழகத்தை பொறுத்த வரையில் கொலை செய்யும் சம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சிவகாசி அருகே சொத்து தகராறில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி மாவட்டம் ஈஞ்சார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகனை, சொத்து தகராறில், அவரது மூன்று சகோதரர்களும், சகோதரியின் இரண்டு மகன்களும் இணைந்து அரிவாளால் வெட்டியும், கத்தியால் கழுத்தை அறுத்தும் படுகொலை செய்தனர்.

இந்த சம்பவத்தின் போது முருகனின் சகோதரர் மணிகண்டன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த போலீசார், முருகனை கொலை செய்த அவரது சகோதரர் முத்தீஸ்வரனையும், சகோதரியின் மகன்களான பொன்ராஜ்குமார் மற்றும் ஆனந்தன் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.

மேலும், தப்பி ஓடிய மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *