கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை: சிபிசிஐடிக்கு மாற்றம்!!!

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி, விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகள் காயத்ரி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐந்தாம் ஆண்டு ஹவுஸ் சர்ஜன் பயிற்சியில் இருந்து வந்தார். இந்தநிலையில் அவர், காலை முதலே தனது விடுதி அறையிலிருந்து வெளியே வராமல் இருந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அவரது தோழிகள், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, காயத்ரி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் காயத்ரி மன அழுத்தத்தில் இருந்ததும், அதற்காக அவர் தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் மாணவியின் மரணம் குறித்த விவகாரமானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *