பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் சில்மிஷம்: 2 பேர் கைது!!
சங்கரன்கோயில் அருகே பள்ளி கல்லூரி மாணவிகளிடம் காதலிப்பதாக கூறி அத்துமீறிய இரண்டு இளைஞர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் இளைஞர்களின் அட்டூழியம் என்பது இன்னும் குறைந்தபாடில்லை. குறிப்பாக போதைக்கு அடிமையாகி நடுரோட்டில் அட்ராசிட்டியில் ஈடுபடுவது. பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்வது போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் அந்த பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை காதலிப்பதாக கூறி அவர்களிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போக்சோவில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வேல்முருகனை சிறையில் அடைத்தனர்.
இதே போல் கரிவலம்வந்தநல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயகுரு என்பவர் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், காதலிப்பதாக கூறி பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.