ஆவினில் புதிதாக 10 பொருட்கள்… தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக ஆவின் நிறுவனம் மூலமாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பொருட்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஆவின் நிறுவனம் புதிதாக 10 பொருட்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன் படி, பால், ஐஸ்கிரீம், இனிப்பு, நெய் உள்ளிட்ட பால் சார்ந்த பொருட்கள் வருகின்ற 20-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கோல்டு காஃபி (Cold Coffee), வெள்ளை சாக்லேட், பலாப்பழ ஐஸ்கிரீம், வெண்ணெய் கட்டி, பாசுந்தி போன்ற பொருட்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல் ஆவின் ஹெல்த் மிக்ஸ், பாலாடை கட்டி, அடுமனை யோகர்ட், ஆவின் பால் பிஸ்கட், ஆவின் வெண்ணெய் முறுக்கு உள்ளிட்ட பொருட்கள் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *