டாஸ்மாக் விடுமுறை! நேற்று முன்தினம் மது விற்பனை இத்தனை கோடியா?

நாடு முழுவதும் நேற்றைய தினத்தில் கோலாகமாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக ஆகஸ்ட் 15ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இதன்காரணமாக முந்தைய நாளே இரண்டு நாள்களுக்கு தேவையான மதுபானங்களை குடிமகன்கள் வாங்கி வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் நேற்று முன்தினம் தமிழகத்தில் டாஸ்மார்க் விற்பனை என்பது கோலாகமாக நடைப்பெற்றுள்ளது.

அதன் படி, ஆகஸ்ட் 14ம் தேதி மட்டும் ஒரே நாளில் ரூ.273.92 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மண்டல வாரியாக பார்க்கும் போது அதிகபட்சமாக மதுரை ரூ.58.26 கோடி, சென்னை ரூ.55.77 கோடி, சேலம் ரூ.54.12 கோடி என வசூலாகியுள்ளது.

அதே போல் திருச்சி ரூ.53.48 கோடி, கோலை ரூ.52.29 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை முதலேயே டாஸ்மாக் கடைகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *