சென்னையில் பிரபல ஹோட்டலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரெய்டு!!

சென்னை அண்ணா நகரில் இருக்கும் பிரபல மாலில் இருக்கும் உணவகத்தில் புழு இருந்தாக புகார் எழுந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர்.

அப்போது கெட்டுப்போன இறைச்சி, மைதா மாவு மற்றும் மள்ளிகைப்பொருட்களை உணவு பாகுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அதோடு பல கெட்டுப்போன பொருட்கள் இருப்பதை உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதனையடுத்து ஒரு மாதத்திற்கும் மேலான கெட்டுப்போன இறைச்சி உள்ளிட்ட பொருட்கள் இருப்பதை கண்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், பிரபல தனியார் உணவகத்திற்கு சீல் வைத்தது மட்டுமல்லாமல், கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *