தருமபுரியில் புகார் அளிக்க வந்த பெண்ணை தாக்கிய மின்வாரிய ஊழியர் சஸ்பெண்ட்..!
தர்மபுரியில் மின்தடை குறித்து புகார் அளிக்க வந்த இருவரை மின் மீட்டர் கொண்டு தாக்கிய மின்வாரிய ஊழியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு என்ற பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருவதால் அந்த பகுதி மக்கள் தொடர் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து புகார் அளிக்க அந்த பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு புகார் அளிக்க அந்த பகுதியை சார்ந்த ஒரு தம்பத்தினர் சென்றுள்ளனர். புகார் அளிக்க வந்த இருவரிடமும் மின்வாரிய ஊழியர் குப்புராஜ் என்பவர் தரக்குறைவாக நடந்துள்ளார். இதை புகார் அளிக்க வந்த நபர் தனது செல்போன் மூலம் படம் பிடிக்கவே அதை பார்த்த மின்வாரிய ஊழியர் என்ன போட்டோ எடுக்குறியா எடுத்துக்கோ என ஆணவமாக பேசிவிட்டு உள்ளே சென்றுள்ளார்.
அவரின் இந்த செயலை தொடர்ந்து வீடியோ எடுத்தார். உள்ளே சென்றவர் அங்கிருந்த மின் மீட்டரை எடுத்து புகார் அளிக்க வந்த நபர் மீது வீசினால். மின்வாரியரின் இந்த செயல் இணையதளத்தில் பரவி வைரலானது. இந்த நிலையில் இது குறித்து விசாரித்த மின்வாரிய ஆய்வாளர் உடனடியாக மின்வாரிய ஊழியர் குப்புராஜ் என்பவரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.