மீனவர்கள் நாலை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் நாளை கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்துலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாளை மறுநாள் கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய மத்துய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
வருகின்ற 14-ம் தேதி கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.ஆந்துர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேலும், கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய மத்துய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 இலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.