இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்: நாகை மீனவர்கள் 9 பேர் கைது!!!
நாகை மாவட்டத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசை படகுகள் மூலம் கடலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய கடல் பகுதியை தாண்டி இலங்கையின் கடல் பகுதியான முல்லைத்தீவில் மீன் பிடித்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒரு விசைப்படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர்களை திரிகோணமலை கடல் பகுதிக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
தற்போது கைதான ஒன்பது மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கைதான 9 மீனவர்களும் விடுவிக்கப்படுவார்களா? அல்லது சிறையில் அடைக்கப் படுவார்களா? என்ற தகவல் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய சம்பவமானது நாகை மாவட்ட மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர். தற்போது மழை குறைந்த நிலையில் இன்று மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
இந்த சூழலில் இலங்கை கடற்படையினால் 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.