புயல் எச்சரிக்கை!! 6 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடற்கரையோரம் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8.30 மணி நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது.

இதன் காரணமாக ஒடிசா மாநிலம் புவனேவருக்கு சுமார் 70கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த புயல் சின்னம் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து சத்தீஷ்கர் மாநிலம் அருகே நாளை 10.08.2022 வலுவிழக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் தூர எச்சரிக்கை குறியீடு -1 ஏற்றப்பட்டுள்ளது.

மேலும், மீனவர்கள் அந்தமான் மற்றும் வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் கரை திரும்புமாறும் மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *