நீர்வரத்து அதிகரிப்பு!! முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு!

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டமானது 138.2 கன அடி நீர்வரத்து அதிகரித்தை தொடர்ந்து உபரி நீர் வெளியேரும் 10 மடகுகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை ஆனது கொட்டி தீர்த்தது. இதனால் அணையின் நீர்மட்டமானது 138.8 அடியாக உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து 2500 கன அடி தண்ணீர் உபரி நீரானது வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் நீர்வரத்து என்பது மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கேரளாவில் இருக்கும் இடுக்கி அணையில் நீர்வரத்தானது திறந்துவிடப்படுகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *