கருமுட்டை விவகாரம்: சுதா மருத்துவமனைக்கு சீல்!!

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சுதா மருத்துவமனையின் பதிவை ரத்து செய்து அதன் ஸ்கேன் மையத்தினை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மருத்துவமனையின் தரப்பில் விளக்கத்தைக் கேட்டு கால அவகாசம் வழங்கினார். அதோடு முறையான காரணம் இல்லாமல் சீல் வைக்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறியது. இந்த கருத்தை எதிர்த்து தமிழக மருத்துவ இயக்குனர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையானது நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பொது நலம் கருதி விதிமுறைகளை மீறியதன் அடிப்படையில் மருத்துவமனைக்கு சீல் வைத்ததாக தெரிவித்தார். இதற்கு சட்டத்தில் இடம் உள்ளதாகவும் அதன் அடிப்படையில் மருத்துவமனைக்கு சீல் வைத்ததாகவும் தெரிவித்தார்.

அதோடு சிறுமியிடம் இருந்து 9 முறை கருமுட்டை எடுத்ததாகவும் இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதாக கூறினார். இதன் காரணமாக நோட்டீஸ் அனுப்ப வேண்டியதில்லை என கூறினார்.

இதனையடுத்து பேசிய நீதிபதி சுதா மருத்துவமனையின் பதிவை ரத்து செய்தது, ஸ்கேன் மையத்திற்கு வைக்கப்பட்ட சீல் என்பது செல்லுபடியாகும் என உத்தரவிட்ட நிலையில் தற்போது சுதா மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *