பள்ளி மாணவிகளிடம் பாலியல் பேச்சு; தமிழ் ஆசிரியை பணியிட மாற்றம்!

Teacher

மணப்பாறை அருகே அரசு பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தரக்குறைவான பேசிய ஆசிரியையை இடமாற்றம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு தமிழ் ஆசிரியராக பணிபுரியும் மெகபூபா மற்றும் காந்திமதி ஆகிய இருவரும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக மிகவும் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசியதாக கூறி 10 -ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகள் தங்களது கைகளை கத்தியால் கீறிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை பார்த்து பதறிப் போன பெற்றோர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெற்றோர்கள் ஆசிரியையிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால், பள்ளி வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த புத்தாநத்தம் போலீசார் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீதுநடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர்.


இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு மணப்பாறை மாவட்ட கல்வி அலுவலர் செல்வி, டி.எஸ்.பி.ராமநாதன் மற்றும் துணை வட்டாட்சியர் வெள்ளைச்சாமி ஆகியோர் விரைந்து வந்து ஆசிரியை மீதுகுற்றச்சாட்டு கூறிய மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் விசாரணை செய்தனர். தற்போது மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய தமிழ் ஆசிரியை மெகபூபா

விசாரணைக்கு பின்னர், மாவட்ட கல்வி அலுவலர் செல்வி செய்தியாளர்களிடம் பேசும்போது, மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய தமிழ் ஆசிரியை மகபூபா, உடனடியாக இடமாற்றம் செய்யப்படுவார் என்றும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய இருப்பதாகவும், மற்றொரு ஆசிரியை குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து, சுமார் 5 மணி நேரமாக நடைபெற்ற போராட்டத்தை கைவிட்டு பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
பள்ளி மாணவிகளை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக ஆசிரியை மீதுகுற்றச்சாட்டு எழுந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *