கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலை முயற்சி!!!

நம் தமிழகத்தில் தற்கொலை முயற்சிகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் இன்னும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலை முயற்சி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மாணவ-மாணவிகள் தனித்தனியே தங்கி படிக்க விடுதி வசதிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நேற்று இரவு 2 மாணவிகள் உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். இதை பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சியடைந்து விடுதி வார்டனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் அவர்களை அழைத்துச்சென்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மாணவிகளை பரிசோதனை செய்த மருத்துவர் 2 பேரும் மெர்குரி சல்பைட்டு சாப்பிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பெரியமேடு போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இருப்பினும் அவர்கள் எவ்வித தகவல்களையும் கூறவில்லை என தெரிகிறது. தற்போது மாணவி இருவரும் நலமுடம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *