மாணவர்களே!! நாளையும் பள்ளிக்கு போக வேண்டாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

விடுமுறை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் படி, தொடர்ந்து 3-வது நாளாக நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அதிகான மழையை எதிர் கொள்ள தயாராக இருப்பதாக தீயணைப்பு அலுவலர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியிருப்பதால் இரண்டு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

நாளைய தினத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *