அறிவியல் வளர்ந்து விட்டது!! இனி தமிழகத்தில் தண்டோரா அறிவிப்புக்கு தடை!!

தமிழகத்தில் தண்டோராவிற்கு தடை விதித்து தலைமை செயலாளர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் இருக்கும் கிராமங்களில் முக்கிய அறிவிப்புகளை தண்டோரா மூலம் கூறும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை, அரசின் முக்கிய அறிவிப்புகள், சுகாதாரத் துறையின் மருத்துவ அறிவுப்புகள் உள்ளிட்டவை தண்டோரா மூலம் அறிவிக்கப்படுகின்றன. தற்போது அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்த போதிலும் தண்டோரா குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வந்தது.

இந்நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்த அறிக்கையில் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் தெரிவிக்கும் தகவல்களை தடை விதிக்குமாறு தெரிவித்துள்ளார். ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம்வரும் போது மூளை முடுக்குகளில் எல்லாம் தகவல்களை கொண்டு சேர்க்க முடியும் என தெரிவித்தார்.

இதனிடையே மாநிலம் முழுவதும் வரும் காலங்களில் தண்டோரா போடுவது தடை செய்யப்படுவதாகவும், இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதோடு இந்த தகவல்களை ஊராட்சிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *