விழுப்புரத்தில் சோகம்: பேருந்து டயரில் சிக்கி பள்ளி மாணவன் பலி!!
கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தில் விபத்துகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பேருந்து டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே பேருந்து வந்த போது அனிஷ்வுடன் வந்தவர்கள் ஓடும் பேருந்தில் இருந்து இறங்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அனிஷ் இறங்க முற்படும் போது நிலைதடுமாறி பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கியுள்ளார்.
இதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் மாணவரின் உடலை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.
அப்போது மாணவன் படியில் நின்று வாறு கீழே இறங்க முயற்சித்தபோது நிலை தடுமாறி விழுந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தினால் பேருந்தின் ஓட்டுனர்கள், நடத்துனர் மீது பேருந்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.