ஆடி அமாவாசை : கருப்பசாமிக்கு கோழி, கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்..!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழாக்கள் நடத்த அரசு தடை விதித்து இருந்தது. இந்நிலையில் தொற்று பரவல் குறைந்துள்லதால் அனைத்து திருவிழாக்களும் நடத்த அரசு அனுமதி கொடுத்துள்ளது.

அந்தவகையில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு விநாயகபுரம் ஸ்ரீ கருப்பசாமி கோயிலில் 22ஆம் ஆண்டு ஆடி அமாவாசை வழிபாடு நடைபெற்றது.

இந்நிலையில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், கோழி, கிடா வெட்டி கருப்பசாமிக்கு நேர்ர்த்திக்கடன் செலுத்தினர். டன் கணக்கில் குவிந்த இறைச்சி அங்கேயே பெரிய பெரிய பாத்திரங்களில் சமைக்கப்படடது.

அமாவாசை விழாவை கண்டு ரசித்த பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து, கிடாக்கறி விருந்தை சாப்பிட்டு மகிழ்ச்சியாக சென்றனர். அதே போல் பல்வேறு இடங்களில் நேற்று கோலாகலமாக அம்மாவாசை கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *