கள்ளக்குறிச்சி விவகாரம்: பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனால் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டகாரர்கல் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனால் பள்ளியில் இருக்கும் பொருட்கள் சூறையாடப்பட்டது.
அதே சமயம் பள்ளியின் இருந்து 3 நிர்வாகிகள் மற்றும் 2 ஆசிரியர்களிடம் விசாரணை நடத்திய சிபிஐ போலீசார் நிலையில் இவர்கள் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தாக்கல் செய்தனர்.
அப்போது பேசிய நீதிபதிகள் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்யும் வரையில் ஜாமீன் வழங்க முடியாது என விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், நேற்று நடைப்பெற்ற விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என ஏதிர்பார்க்கப்படுகிறது.