நாளை இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!!

தமிழகத்தின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாளை நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, சேலம்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, கரூர்‌, நாமக்கல்‌, திருச்சி, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, பெரம்பலூர்‌ மற்றும்‌ அரியலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. பெரம்பலூர்‌, அரியலூர்‌, கடலூர்‌, திருச்சி மற்றும்‌ தஞ்சாவூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என கூறியுள்ளது.

வருகின்ற 31 மற்றும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரையில் குமரிக்கடல்‌ பகுதி மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக கடலோர பகுதிகளில்‌ சூறாவளிக்காற்றும்‌ மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *