சென்னையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி !!!

நம் தமிழகத்தில் வெளிமாநிலங்களிருந்து வந்து சென்னை வருபவர்களின் எண்ணிக்கையானது அதிகமாகும். அந்த வகையில் மேற்கு வங்க மாநிலம் கணேஷ்பூர் பகுதியை சேர்ந்தவர் 22 வயதான சுகுமார் தாஸ். இவர் கட்டட தொழிலாளியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மேடவாக்கம் காயத்ரி நகர் ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் 2-வது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து மார்பு மற்றும் கழுத்தில் பலத்த காயம் அடைந்த சுகுமார் தாஸ், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படார். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சுகுமார் தாஸ் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்காக வந்த வெளிமாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *