மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது!!

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிந்துள்ளதால் தண்ணீர் திறப்பானது 11,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடியது. குறிப்பாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கேரளா, கர்நாடகா, காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைந்ததால் கர்நாடகா அணைகளுக்கான நீர் வரத்தும் கணிசமாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜர் போன்ற அணைகளில் இருந்து தமிழகத்திற்கான தண்ணீர் திறப்பானது வினாடிக்கு 16,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 16, 204 கன அடியாக குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மழைபெய்து வருவதால் பாசன நீரின் தேவையானது குறைந்து வருகிறது.

இதனால் அணைக்கு வரும் தண்ணீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமானது தொடர்ந்து 12 நாட்களாக 120 அடியில் நீடித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *