திடீரென பொங்கி வந்த வெண்ணிற நுரை: மக்களுக்கு அபாய எச்சரிக்கை!!!

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனை பயன்படுத்திக்கொண்ட சாயக்கழிவு தொழிற்ச்சாலைகள் நேரடியாக ஆத்துக்காடு பகுதியில் திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுகளை திறந்துவிடப் படுகின்றனர்.

ஏற்கனவே தரைப்பாலம் நுரைகளால் மூழ்கியதால் அப்பகுதியில் இருக்கும் கிராம மக்கள் சிரமப் பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக பொதுமக்கள் நடந்து செல்லும் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த ஊரக உள்ளாட்சி துறை அதிகாரிகள் தரைப்பாலம் முழுவதும் இருக்கும் நுரைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதோடு இந்த வழியாக பொதுமக்கள் செல்லக்கூடாது என்பதற்காக இரண்டு புறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாற்று பாதையில் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.

மேலும், இவ்வகை கழிவுகளால் நிலத்தடி நீர் முழுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இவ்வகை நுரைகளால் தோல் அழற்சி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *