சிறார்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்: விதிமுறைகள் வெளியீடு!!!
தமிழகத்தில் இருக்கும் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு நெறிமுறைகளை வழிவகுத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 1,545 அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 குழந்தைகளுக்கு காலை உணவு வழக்கும் திட்டத்தை தமிழக முதல்கட்டமாக செயல்படுத்திட ரூ.33.55 லட்சம் கோடி நிதி ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் உப்புமா, கிச்சடி, பொங்கல் உள்ளிட்ட உணவுகளை அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் வழங்க தமிழக அரசு வழிவகுத்துள்ளது. அதேபோல் வாரம் இரண்டு நாட்களுக்கு அந்த பகுதியில் இருக்கும் சிறுதானியங்களை கொண்டு சிற்றுண்டி தயாரிக்க வேண்டுமென அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உணவு தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள் தரம் வாய்ந்ததாகவும், வெளி பொருட்கள் கலக்காமல் இருக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணையை மீண்டும் பயன்படுத்தி குழந்தைகளுக்கு தரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவை குழந்தைகளுக்கு வழங்குவதற்கு முன்பாக பள்ளி மேலாண்மை குழு ருசி பார்க்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. மேலும், உணவு தயாரிக்கும் வினியோகிக்கும் சமையலர் மற்றும் உதவியாளர்கள் சுத்தத்தை பராமரிக்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.