மாணவிக்கு பாலியல் தொல்லை: பதிப்பாளர் சஸ்பெண்ட்!!!
பெரியார் பல்கலைக்கழகத்தின் பொருப்பு பதிப்பாளர் கோபி மாணவி ஒருவருக்கு ஆராய்ட்சி வகுப்பு எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினத்தில் விடுமுறை என்ற போதிலும் மாணவியை கல்லூரிக்கு வரவழைத்து சிறிது நேரம் கழித்து மாணவி வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெரியார் பல்கலை கழக பொறுப்பாளர் தன்னை சிலர் தாக்கியதாக கூறி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு காவல் நிலையத்தில் புகார் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சமயத்தில் மாணவி தரப்பினரிடம் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதில் ஆராய்ச்சி வகுப்பிற்கு சென்ற என்னை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவியர் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டு இருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது பெரியார் பல்கலைக்கழகத்தின் பொருப்பு பதிப்பாளர் கோபி அளித்த புகார் பொய்யானது என்று உறுதியானது.
இதனால் பெரியார் பல்கலைக்கழகத்தின் பொருப்பு பதிப்பாளர் கோபி மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.