புதுமண தம்பதியினரை கொலை செய்த தந்தை கைது!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த மானதிராஜ் என்பவர் அதே ஊரை சேர்ந்த மாமாவின் மகள் ரேஷ்மாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களுடைய காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்களுடைய மாமன் வீட்டார்கள் தம்பதி இருவரையும் படுகொலை செய்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தியதில் ரேஷ்மாவின் தந்தை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.