சேலம் மாவட்டத்திற்கு வரும் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை!!

விடுமுறை

தமிழகத்தில் ஆடி மாதம் தொடங்கினாலே அனைத்து மாவட்டங்களிலும் திருவிழாக்கள் தொடங்கியது என்று கூறலாம். அந்தவகையில் தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலய திருவிழா நடைப்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு மற்றும் ஆடி பெருக்கு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் ஆகஸ்ட் 3ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகின்ற செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவித்துள்ளனர்.

இத்தகைய அறிவிப்பினால் மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போல் வருகின்ற ஆகஸ்ட் 5-ம் தேதி தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலய திருவிழா நடைப்பெற இருப்பதால் அன்றைய தினத்தில் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *