மாணவி தற்கொலை விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம்!
திருவள்ளூர் அடுத்த கீழச்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் இன்று காலை 12-ம் வகுப்பு படிக்கும் சரளா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில் போலீசார் காலை முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் காவல்துறையினர் தரப்பில் விசாரணை நடத்தியதில் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவருடைய வழக்கு விசாரணையானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம் மாணவியின் சொந்த ஊரான திருத்தணியில் அவரது உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரேத பரிசோதனையில் பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.