கனமழை எதிரொலி: கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!!!
தொடர் மழையின் காரணமாக கும்ப கரையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் காரணமாக அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 8 கிலோமீட்டர் தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இயற்கையாகவே அமைந்துள்ள இந்த அருகில் இருந்து கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த அருவியில் வந்து குளித்து செல்வார்கள். இந்த வார விடுமுறை என்பதால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது அதிகரித்து உள்ளது.
மேலும், தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.