கனமழை எதிரொலி: புதுக்கோட்டையில் பல ஆயிரம் வாழைமரங்கள் சேதம்!!

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பகோட்டைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல ஆயிரம் வாழைமரங்கள் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் விவசாயத்தை நம்பியே அப்பகுதி மக்கள் வாழ்வாதாரமாக உள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த கனமழை பெய்ததில் வாழைமரங்கள் சாய்ந்ததால் அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு நெல் போன்ற பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய நிலையில் தற்போது இத்தகைய பாதிப்பினையும் அறிந்து நிவாரணம் வழங்க வேண்டும் கூறியுள்ளது. அதே போல் ஒரு வாழைமரங்களுக்கு சுமார் 250 முதல் 300 வரையில் செலவு ஆகும் சூழலில் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பானது அதிகளவில் உள்ளதாக கூறுயுள்ளனர். .

இதனிடையே தமிழக அரசு பாதிப்புகளை ஆராய்ந்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இவ்வாறு செய்யாவிட்டால் தங்களின் வாழ்வாதாரமானது முற்றிலும் பாதிப்படையும் நிலையில் உள்ளதாக கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *