ஷாக் நியூஸ்!! காவலர் குடியிருப்பிலேயே காவலர் தாயார் கொலை…
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பின்பகுதியில் காவலர் குடியிருப்பு பகுதி ஒன்று உள்ளது. அதில் கைவிடப்பட்ட ஒரு பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று கிடப்பதாக புது நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று பார்த்தபோது கால்கள் கட்டப்பட்டு காது அறுக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில் ஆயுதப்படை காவலரான இவரது மகன் சிவகுரு கடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருவது மட்டுமல்லாமல் அதே பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே அவர் தாயை பார்க்க சென்றபோது கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. எதற்காக கொலை செய்யப்பட்டார்? யார் கொலை செய்தார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர் குடியிருப்பு பகுதியில் காவலரின் தாயார் கொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.