சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு!!!
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்விகள் நடைபெறாத நிலையில் கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24 ஆம் தேதி வரை சிபிஎஸ்இ தேர்வுகள் நடைப்பெற்றது.
இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வு வாரியம் விரைவில் வெளியிட வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
அதன் படி, பிளஸ்-2 தேர்வை எழுதிய 92.71% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பிளஸ்-2 தேர்வை 14,35,366 எழுதிய மாணவர்களில் 13,30,662 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதே போல் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் cbse.gov.in இல் தேர்வு முடிகளை தெரிந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், cbse.gov.in, cbseresults.nic.in என்ற இணையதளத்தை கிளிக் செய்து ரோல் எண் அல்லது பிறந்த தேதி போன்ற தேவையான சான்றுகளை சமர்ப்பித்து பிளஸ்-2 மதிப்பெண் அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.