மீண்டும் அதிர்ச்சி சம்பவம்: பள்ளியின் 2வது மாடியிலிருந்து குதித்த மாணவி!!!
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டு பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்துள்ளார்.
அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இவரது முதுகு எழும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல் இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.