கள்ளக்குறிச்சி விவகாரம்: ஆணையக்குழு விசாரணையில் அதிர்ச்சி தகவல்!!
வன்முறை நடந்த தனியார் பள்ளியானது எவ்வித அனுமதியும் இன்றி விடுதி நடைப்பெற்று வந்தது அம்பலமாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறை தொடர்பாக மாணவியின் மரணம் மற்றும் வன்முறை தொடர்பாக மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆய்வு குழுவினர் நேரில் ஆய்வு நடத்தினர்.
தனியார் பள்ளி மற்றும் விடுதியை பார்வையிட்ட பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி எந்த அனுமதியும் பெறாமல் நடத்தி வந்ததாக கூறியுள்ளார்.
மாணவியின் மரணம் தொடர்பாக அவர்களுடைய தோழிகளிடம் குழுவினர் விசாரணை நடத்தினர். முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற குழுவினர் மாணவி மரணம் மற்றும் பள்ளியில் நடைபெற்ற வன்முறை குறித்து கேட்டறிந்தார்.
பள்ளியின் விதிமீறல்கள் குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்போவதாக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.