ரூ.8.86 கோடி மதிப்பிலான ஹெராயின்: சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!
சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் மற்றும் தங்கம் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தாண்சானியா நாட்டைச் சேர்ந்த ஜோசப் பேட்ரிக்( வயது 37) என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது கேப்சூல் வழியாக போதை மாத்திரை விழுங்கியது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு வாந்தி எடுக்கும் மருந்து கொடுக்கப்பட்ட நிலையில் அதில் சுமார் 1.256 போதை மாத்திரைகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதனிடையே சர்வதேச மதிப்பில் 8 கோடியே 86 லட்சம் மதிப்புடையது என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மீது போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும், மாத்திரை வடிவில் 1.256 கிலோ எடையுள்ள ஹெராயினை சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.