சரியான திட்டமிடல் இல்லை! பாலம் மூழ்கியதால் பரிசலில் செல்லும் அவல நிலை..

மேட்டுப்பாளையம் அருகே காந்தையாற்றின் மீது முறையாக திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்ட மேம்பாலம் மூழ்கியதால் கிராமமக்கள் பரிசலில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் காந்தையாற்றில் மேம்பாலம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை கணக்கிடாமல் கட்டப்பட்டதால் மழை காலங்களில் காந்தையாறு மேம்பாலம் மூழ்கி விடுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மழை காலங்களில் பரிசலில் செல்லும் அலம் 10 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் நீடிப்பதாக அவர் கூறினர். இதனிடையே பரிசலில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிறுமுகை பேரூராட்சி சார்பில் கவச உடைகள் வழங்கப்படுகின்றன.

மேலும், முறையாக திட்டமிடப்படாத பாலம் கட்டப்பட்டதால் மழைகாலங்களில் பயனில்லாமல் போகும் பாலத்தை மாற்றியமைத்து புதிய பாலத்தை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *