நண்பணை வெட்டி கிணற்றில் வீசிய கொடூரம்: மதுரையில் பயங்கரம்!!

அவனியாபுரத்தில் மாயமான இளைஞரை காதல் விவகாரத்தில் அவரது நண்பர்களே கயத்தாறு அருகே அரிவாளால் வெட்டி கிணற்றில் வீசியது தெரியவந்துள்ளது.

மதுரை அவனியாபுரம் எம்எம் காலனியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் பெருங்குடி தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 30ஆம் தேதி நண்பர்களுடன் கோவிலுக்கு செல்வதாக கூறிய வெற்றிவேல் செல்போன் எண் அன்று மாலை 4 மணிக்கு மேல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது பெற்றோர் தேடி வந்தனர். பின்னர் போலீசில் புகார் கொடுத்த நிலையில் புகாரையடுத்து தேடிவந்த போலீசார் வெற்றிவேலின் நண்பர் அஜய்முருகனை கைதுசெய்து விசாரணை நடத்தினர். அப்போது அஜய்முருகன் தங்கையை வெற்றிவேல் காதலிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவரை கடத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. அஜய் தனது சொந்த ஊரான தூத்துகுடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வெள்ளாளங்கோட்டை கிராமத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அங்கு காட்டுப்பகுதியில் வைத்து வெற்றிவேலை அரிவாளால் வெட்டி கிணற்றில் வீசியது தெரியவந்தது.

அதன் பின், வெற்றிவேல் உடலை மீட்டனர். அஜய் மற்றும் மணிகண்டன் ஆகியோர் ஒன்றுமே தெரியாதது போல் கடந்த 15 நாட்களாக அவனியாபுரம் பகுதியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *