வார விடுமுறை: ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்!!

வார விடுமுறை ஆடி முதல் நாளை ஒட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி செல்லும் பக்தர்கள்

ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை மற்றும் ஆடி மாத முதல் நாளை ஒட்டி வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி வருகின்றனர்.

பின்னர் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்குள் உள்ள 22 புண்ணிய திருத்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி பக்தர்கள் செல்கின்றனர். அதன் பின்னர் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மனை வழிபட்டு பக்தர்கள் செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *