நாளை முதல் அரிசி விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?
வணிக பெயரில் அல்லாமல் பைகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் அரி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு வருகின்ற 18ஆம் தேதி முதல் அமல்படுத்த இருப்பதால் அரிசி கிலோவுக்கு 3 முதல் 5 ரூபாய் வரையில் உயர்த்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரிசிக்கான ஜிஎஸ்டி வரியை நீக்கக் கோரி தமிழக அரசு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே அரிசிக்கான ஜிஎஸ்டி வரியை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் அரிசி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் உரிமையாளர்கள் நேற்று வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த சூழலில் நாளை முதல் அரிசியின் விலையானது கிலோவிற்கு 3 முதல் 5 ரூபாய் வரையில் உயரவாய்ப்புள்ளதாக அரிசி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.