இது மதத்திற்கான ஆட்சி இல்லை..!! அதிகாரியை கண்டித்து பேசிய தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர்..!

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பொதுப்பணித்துறை அதிகாரியை கண்டிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

தர்மபுரி மாவட்டத்தில் ஆலாபுரம் ஏரி புனரமைக்கும் பணியை துவக்கி வைக்கச் சென்றபோது பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்த பொதுப்பணித்துறை அதிகாரியிடம் இது திராவிட ஆட்சியா அல்லது ஒரு மாதத்திற்கான ஆட்சியா என கேள்வி எழுப்பி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கண்டித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த ஆலாபுரம் ஏரியில் 1.38 லட்சம் மதிப்பீட்டில் ஏரி புனரமைக்கும் பணியை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தொடங்கி வைக்க சென்றார். அப்போது பொதுப்பணித்துறை சார்பில் பூமி பூஜை செய்ய தேங்காய், வாழைப்பழம், கற்பூரம் உள்ளிட்ட தீபாராதனை பொருட்கள்  கொண்டு ஏற்பாடு 

இதைக்கண்ட செந்தில்குமார் பொதுப் பணித் துறை அதிகாரியை அழைத்து இது திராவிட மாடல் ஆட்சி. இந்த ஆட்சியில் நடைபெற்ற அரசு விழாவில் இதுபோன்ற சம்பிரதாயங்கள் செய்யக் கூடாது என உங்களுக்குத் தெரியாதா. விதிமுறைகள் வழங்கவில்லையா என கேட்டார். அப்போது, பொதுப்பணித்துறை அதிகாரி நாடாளுமன்ற

உறுப்பினரிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் இது அனைவருக்குமான ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி, ஒரு மதத்தினரை மட்டும் அழைத்து நிகழ்ச்சி நடத்துவது தவறு,அனைத்து மதத்தினரையும் அழைத்து நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *