கிருஷ்ணகிரியில் சமண மதக் கோயிலில் குரு பவுர்ணமி வழிபாடு!!

கிருஷ்ணகிரி அருகே சமண மதக் கோயிலில் குரு பவுர்ணமி யை முன்னிட்டு காய்,கனிகளால் உருவாக்கப்பட்ட கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் அருகே உலகில் அதிக உயரம் கொண்ட சமண கோயிலாக இது திகழ்கிறது. இங்கு குரு பவுர்ணமி பூஜையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

சைவ உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விதவிதமான காய்கறிகள் மற்றும் பழங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

குடியரசுத்தலைவர் வேட்பாளரான திரவுபதி முர்முவை சிறப்பிக்கும் வகையிலும் முர்முவுக்கு 12 அடி உயரமுள்ள காய்கறி மற்றும் பழங்களான சிலை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் முன்னாள் பிரதமர் நேரு இந்திராகாந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களின் உருவகங்கள் பழங்களில் காட்சிப்படுத்தப்பட்டது இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த கோயிலில் குரு பவுர்ணமி வழிபாடு சிறப்பாக நடைப்பெறாத நிலையில் தற்போது மீண்டும் களைக்கட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *