முழு கொள்ளளவை எட்டிய பில்லூர் அணை: பவானி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!!

Warning

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாவே கனமழை பெய்து வரும் காரணத்தினால் பில்லூர் அணைக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவானது அதிகரித்தது. இந்நிலையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக நள்ளிரவு முழுகொள்ளவை எட்டியதாக கூறப்படுகிறது.

இதனிடையே அணையின் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு 13 ஆயிரம் கன அடி நீர் வருவதால் அணையில் இருந்து முழுமையாக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும், அதே போல் ஆற்றில் தேவையில்லாமல் இறங்க கூடாது என வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருதால் பவானி ஆற்றில் தண்ணீர் முழுமையாக திறந்துவிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *