நாளை 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை அப்டேட்!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு நாளைய தினத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அதே போல் ஜூலை 16 முதல் 18ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், நாளையும் லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா, தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் பலத்த காற்று வீசும். இன்றும், நாளையும், தமிழகம், ஆந்திரா கரையோரப் பகுதிகள், தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *