திருத்தணியில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: எப்போது தெரியுமா?
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் வருகின்ற 14ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே திருத்தணி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் படி, திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 14ம் தேதி நண்பகல் 11:00 மணிக்கு நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளை புகார் தெரிவிக்கலாம். மேலும், தங்கள் கோரிக்கைகள் குறித்தும் மனுவாகவும் கொடுக்கலாம் என்று கூறியுள்ளார். எனவே திருத்தணி கோட்ட விவசாயிகள் மற்றும் மின்நுகர்வோர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என கூறியுள்ளார்.
மேலும், இத்தகைய அறிவிப்பால் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. அன்றைய தினத்தில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.