நடத்தையில் சந்தேகம்: காதலியை கத்தியால் குத்திய காதலன்!!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த குப்பத்தாம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் சதீஸ் குமார். இவர் தனியார் மருத்துவ மனையில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த யாசினி மெடிக்கல் படித்து வருவதாக கூறப்படுகிறது.
இருவரும் காதலித்து வந்த நிலையில் காட்பாடி அடுத்த திருவலம் பகுதிக்கு சென்ற போது தனது காதலி யாசினி மீது சதீஸ்க்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களிடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த சதீஸ் யாசினியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் யாசினியை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே யாசினி ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல் சதீஸ் குமாரை திருவலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், காதலியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.