சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ஏற்பாடுகள் தீவிரம்!!
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள மாமல்லபுரம் நுழைவு வாயில் தயியார், அரசு கட்டடங்கள் சுவர்களில் தமிழக பாரம்பரிய காலாச்சாரத்தை பரிசாற்றும் சுவர் ஓவியங்கள் வரையும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரையில் நடைப்பெற உள்ளது. போட்டியில் பங்கேற்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என ஏராளமானோர் வர உள்ளனர்.
இதனால் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் நவீன வசதிகளுடன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. மேலும் கூடுதலாக பிரம்மாண்ட அரங்கம் அமைக்கும் பணிகளும் நடைப்பெற்று வருகின்றனர். இந்நிலையில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சுமார் 8 கோடி நிதி ஒதுக்கி குடிநீர் வசதிகள் பூங்காக்கள், நகருக்கு செய்வதற்கான சாலையோரம் இருக்கும் மண்ணை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.
அதேபோல் நகரின் நுழைவு ஈசிஆர் சாலையில் உள்ள தனியார் அரசு கட்டடங்களில் தமிழர்களிம் பாரம்பரிய கலாச்சாரத்தை பரைசாற்றும் சுவர் ஓவியங்கள் வரையும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளனர். இதில் கடற்கரை கோயில், ஜல்லிக்கட்டு காளை அடக்குதல், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை உள்பட சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு இருப்பதால் சுற்றுலா பயணிகள் அவற்றை கண்டு ரசித்துள்ளனர்.