மின் கசிவு காரணமாக தீ விபத்து: 2 இளைஞர்கள் பலி!!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தனியார் கணினி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையம் எதிரே இருக்கும் தனியார் கணினி நிறுவனத்தில் சதீஸ், கோபிநாத் ஆகிய 2 இளைஞர்கள் நேற்று தரைதலம் போடுவதற்கு நேற்று இரவு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கேயே படுத்து உறங்கிய தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை அந்த கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு இளைஞர்களும் மூச்சு திணறல் ஏற்பட்டு தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே வணிக வளாக காவலர் இது தொடர்பாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 2 இளைஞர்களின் உடல்களை மீட்டு அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆயிரம்விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *