சென்னையில் பயங்கரம்!! மர்ம நபர்களால் ஒருவர் வெட்டி படுகொலை…
சென்னை புளியந்தோப்பு மாவட்டத்தின் மாத்த அம்மன் கோயில் முதல் தெருவில் வசித்து வருபவர் ஆளி என்கிற சுரேஷ் வயது 45. இவருக்கு ஜோதி என்ற (வயது 32) பெண்ணுடன் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிய நிலையில் 17 வயதில் மகன் மற்றும் 12 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் ஆளி என்கிற சுரேஷ் காயலாங் கடையில் லோடிங் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் யார் பேச்சுக்கும் போகமாட்டர் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த சூழலில் இரவு சுமார் 7 மணி அளவில் சாலையில் தனிமையில் இருக்கும் பொழுது வேவுபார்த்த மர்ம கும்பல் ஆன 4 பேர் கொண்ட கும்பல் ஆழி (எ) சுரேஷ் என்பவரை கத்தியால் சரமாரியாக வெட்டி தப்பித்துச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துமனையில் அனுப்பப்பட்டனர்.
மேலும் புளியந்தோப்பு மாவட்ட துணை ஆணையர் ஈஸ்வரன் அவர்களின் தலைமையில் செம்பேடு பாபு உதவி ஆணையர் அவர்களின் முன்னிலையில் சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆளி என்கிற சுரேஷ் மீது ஏற்கனவே ஏதேனும் பழைய வழக்குகள் உள்ளதா ? அல்லது முன் விரோதம் காரணம் ஏதேனும் உள்ளதா என பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.